பகர வருக்கம்
77. பழிப்பன பகரேல் |
பெறியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றை பேசாதே.
78. பாம்பொடு பழகேல் |
பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.
79. பிழைபடச் சொல்லேல் |
குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.
80. பீடு பெற நில் |
பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் |
உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்.
82. பூமி திருத்தி உண் |
விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கை தொழிலாகக் கொள்.
83. பெரியாரைத் துணைக் கொள் |
அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்.
84. பேதமை அகற்று |
அறியாமையை போக்கு.
85. பையலோடு இணங்கேல் |
அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.
86. பொருள்தனைப் போற்றி வாழ் |
பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்.
87. போர்த் தொழில் புரியேல் |
யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாக செய்யாதே.