அண்ணாக்குத் தன்னையடைத் தங்கமிர் துண்ணில் விண்ணோர்க்கு வேந்தனு மாம். |
61 |
ஈரெண் கலையி னிறைந்தவமிர் துண்ணில் பூரண மாகும் பொலிந்து. |
62 |
ஓங்காரமான கலசத்தமிர் துண்ணில் போங்காலமில்லை புரிந்து. |
63 |
ஆனகலசத் தமிர்தை யறிந்துண்ணில் போனகம் வேண்டாமற் போம். |
64 |
ஊறுமமிர்தத்தை யுண்டியுறப் பார்க்கில் கூறும் பிறப்பறுக்க லாம். |
65 |
ஞான வொளிவிளக்கா னல்லவமிர் துண்ணில் ஆன சிவ யோகி யாம். |
66 |
மேலையமிர்தை விளங்காமற்றா னுண்ணில் காலனை வஞ்சிக்க லாம். |
67 |
காலன லூக்கங் கலந்த வமிர்துண்ணில் ஞான மதுவா நயந்து. |
68 |
எல்லையி லின்னமிர்த முண்டாங் கினிதிருக்கில் தொல்லை முதலொளியே யாம். |
69 |
நிலாமண்டபத்தி னிறைந்த வமிர்துண்ணில் உலாவலா மந்தரத்தின் மேல். |
70 |