அதிகாரம் 3
2 அவளை நான் பதினைந்து வெள்ளிக்காசும், ஒன்றரைக் கலம் வாற்கோதுமையும் கொடுத்து எனக்கென்று வாங்கிக் கொண்டேன்.
3 பின்பு அவளை நோக்கி, "நீ வேசியாய்த் திரியாமலும், வேறொருவனுக்கும் உடைமையாகாமலும், நெடுநாள் எனக்கே உரியவளாக வாழவேண்டும். நானும் அவ்வாறே வாழ்வேன்" என்றேன்.
4 ஏனெனில் இஸ்ராயேல் மக்கள் நெடுநாளைக்கு அரசனும் தலைவனுமின்றி, பலியும் பீடமுமின்றி, அர்ச்சகரும் ஆசாரியனுமின்றி இருப்பார்கள்
5 அதற்குப் பிறகு, இஸ்ராயேல் மக்கள் மனந்திரும்பித் தங்கள் கடவுளாகிய ஆண்டவரையும், தங்கள் அரசனாகிய தாவீதையும் தேடுவார்கள்@ இறுதி நாட்களில் ஆண்டவரையும், அவர் நன்மைகளையும் நாடி நடுக்கத்தோடு அணுகி வருவார்கள்.