அதிகாரம் 6
2 ஆகையால், அரசர்களே, கேட்டுக் கண்டுபிடியுங்கள்@ உலகின் எல்லைகளை ஆள்பவர்களே, கற்றுக் கொள்ளுங்கள்.
3 மக்கள் கூட்டங்களைக் நடத்துபவர்களே, செவிகொடுங்கள்@ திரளான மக்களினங்களைக் குறித்துப் பெருமிதங் கொள்பவர்களே, கேளுங்கள்.
4 உங்களுக்கு அதிகாரம் ஆண்டவர் தான் அளித்தார்@ உன்னதரிடமிருந்தே நீங்கள் ஆட்சியுரிமை பெற்றீர்கள்@ அவர் தான் உங்கள் செயல்களை ஆராய்வார், உங்கள் திட்டங்களைப் பரிசோதிப்பார்.
5 அவருடைய அரசில் அமைச்சர்களாய் இருந்த போது நீங்கள் நேர்மையாகத் தீர்ப்பு வழங்கவில்லை, திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை, கடவுளின் திருவுளத்திற்கேற்றபடி நடக்கவுமில்லை.
6 ஆதலால் திடீரென உங்கள் மேல் சினத்தோடு வருவார், ஏனெனில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் மேல் கடுமையான தீர்ப்புச் செலுத்தப்படும்.
7 எளியவன் இரக்கம் பெற்று மன்னிக்கப்படலாம், வல்லவர்களோ கடுமையாய்த் தண்டிக்கப்படுவர்.
8 அனைத்திற்கும் ஆண்டவர் யாருக்கும் அஞ்சமாட்டார்@ எவருடைய பெருமையையும் பொருட்படுத்தமாட்டார்@ சிறியோரையும் பெரியோரையும் உண்டாக்கியவர் அவரே, அனைவரையும் சமமாகவே கருதி நடத்துகிறார்.
9 ஆனால் வல்லமை மிக்கவர்களிடம் கடுமையான கணக்குக் கேட்கப்படும்.
10 ஆகையால் மன்னர்களே, நான் சொல்வது உங்களுக்கே, நீங்கள் ஞானத்தைக் கற்றுக் கொள்ளவும் வழுவாமல் இருக்கவுமே இவற்றை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
11 பரிசுத்தமானவற்றைப் பரிசுத்தமாய்க் கடைப்பிடிக்கிறவர்கள் பரிசுத்தர்களாவார்கள்@ அவற்றைக் கற்றுக் கொண்டவர்கள் தங்கள் செயல்களுக்கு நியாயம் சொல்லக் கூடும்.
12 ஆதலால், என் சொற்களை ஆவலாய்க் கேளுங்கள், அவற்றைத் தேடுங்கள், உங்களுக்கு அறிவுண்டாகும்.
13 ஞானம் ஒளிமிக்கது, மங்காதது@ அதன் மேல் அன்புள்ளவர்கள் எளிதில் அதைக் காண்பார்கள், அதைத் தேடுகிறவர்கள் அதைக் கண்டடைவார்கள்.
14 அதன் மேல் நாட்டமுள்ளவர்களுக்குத் தன்னையே வெளிப்படுத்த முந்திக்கொள்ளும்.
15 அதைத் தேடுவதற்காகக் காலையிலேயே எழுந்திருப்பவனுக்கு அதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமன்று: அது தன் வாயிலருகிலேயே அமர்ந்திருப்பதைக் காண்பான்.
16 ஞானத்தின் மேல் ஒருவன் தன் சிந்தையை நிறுத்தினால் அதுவே அவனுக்கு அறிவின் நிறைவு. அதனை அடைய விழிப்பாயிருப்பவன், விரைவில் கவலைகளினின்று விடுபடுவான்@
17 தன்னை ஏற்கத் தகுதியுள்ளவர்களை ஞானம் சுற்றித் தேடிக் கொண்டு போகிறது@ வழியில் அவர்களுக்கு இன்முகத்தோடு தோன்றுகிறது@ நினைக்குந்தோறும் அவர்களை எதிர்கொண்டு சந்திக்கிறது.
18 அறிவு பெற வேண்டுமென்னும் உண்மையான ஆவலே ஞானத்தின் தொடக்கமாகும்.
19 அறிவின் மேலுள்ள ஆவலே ஞானத்தின் மேல் வைக்கும் அன்பு@ அந்த அன்பானது அதன் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் அடங்கும்@ அதன் கட்டளைகளைக் கடைப்பிடித்தல் சாகாமைக்கு உறுதி தரும்.
20 சாகாமை ஒருவனைக் கடவுளுக்கு அருகில் கொணர்கிறது@
21 அவ்வாறே ஞானத்தின் மேல் கொள்ளும் ஆவல் முடிவில்லா அரசுக்குக் கூட்டிச் செல்கிறது.
22 ஆதலால், மக்களினங்களை ஆளும் மன்னர்களே, அரியணைகளில் அமர்ந்து செங்கோலோச்ச விரும்பினால், ஞானத்தைப் போற்றுங்கள்@ அப்போது என்றென்றும் அரசாள்வீர்கள்.
23 மக்களினங்கள் மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களே, நீங்கள் அனைவரும் ஞானத்தின் ஒளியை நேசியுங்கள்.
24 ஞானம் என்றால் என்ன, அது எப்படி உண்டானது என்பதை உங்களுக்கு விளக்கிச் சொல்வேன்@ அதன் மறைபொருட்களை உங்களிடமிருந்து நான் ஒளிக்கமாட்டேன்@ அது உண்டாக்கப்பட்டது முதல் அதை ஆராய்ந்து உண்மையினின்றும் பிறழாமல் அதைப் பற்றிய அறிவை உங்களுக்கு முறையாக விளக்கிக் காட்டுவேன்.
25 தொல்லை தரும் பொறாமையை வழித்துணையாய்க் கொள்ளமாட்டேன், ஏனெனில் பொறாமைக்கும் ஞானத்திற்கும் பொருத்தம் இல்லை.
26 ஞானிகளின் கூட்டம் உலகத்திற்கு மீட்பு@ அறிவுடைய மன்னன் குடிமக்களுக்கு நீடித்த நல்வாழ்வு.
27 ஆதலால் என் சொற்களால் அறிவு பெறுங்கள், அதனால் உங்களுக்குப் பயன் விளையும்.