குணாநேதாநதீத்ய த்ரீந்தேஹீ தேஹஸமுத்பவாந்। ஜந்மம்ருத்யுஜராது:கைர்விமுக்தோ அம்ருதமஷ்நுதே॥ 14.20 ॥ |
உடம்பை உண்டாக்கிய இந்த மூன்று குணங்களையும் கடந்து பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகிய துக்கங்களிலிருந்து விடுபட்டவன் மரணமில்லா பெருநிலையை அடைகிறான்.
அர்ஜுன உவாச। |
கைர்லிங்கைஸ்த்ரீந்குணாநேதாநதீதோ பவதி ப்ரபோ। கிமாசார: கதம் சைதாம்ஸ்த்ரீந்குணாநதிவர்ததே॥ 14.21 ॥ |
அர்ஜுனன் கேட்டது : கிருஷ்ணா ! இந்த மூன்று குணங்களையும் கடந்தவனின் அடையாளங்கள் என்ன ? நடத்தை எப்படி இருக்கும் ? அவன் இந்த குணங்களை எவ்வாறு கடக்கிறான் ?
ஸ்ரீபகவாநுவாச। |
ப்ரகாஷம் ச ப்ரவ்ருத்திம் ச மோஹமேவ ச பாண்டவ। த த்வேஷ்டி ஸம்ப்ரவ்ருத்தாநி ந நிவ்ருத்தாநி காங்க்ஷதி॥ 14.22 ॥ |
ஸ்ரீ பகவான் கூறினார்: அர்ஜுனா ! ஒளியும் செயலும் மனமயக்கமும் வரும் போது அவன் வெறுப்பதில்லை, வராத போது நாடுவதுமில்லை.
உதாஸீநவதாஸீநோ குணைர்யோ ந விசால்யதே। குணா வர்தந்த இத்யேவ யோ அவதிஷ்டதி நேங்கதே॥ 14.23 ॥ |
யார் சாட்சி போல் இருந்துகொண்டு, குணங்களால் அலைகழிக்கபடுவதில்லையோ, குணங்களே செயல்படுகின்றன என்று உறுதியாய் இருக்கிறானோ, அந்த உறுதியில் இருந்து விலகாமல் இருக்கின்றானோ அவன் மூன்று குணங்களையும் கடந்தவன்.