யஸ்ய நாஹம்க்ருதோ பாவோ புத்திர்யஸ்ய ந லிப்யதே। ஹத்வா அபி ஸ இமாம்ல்லோகாந்ந ஹந்தி ந நிபத்யதே॥ 18.17 ॥ |
நான் செய்கிறேன் என்ற எண்ணம் யாருக்கு இல்லையோ, யாருடைய மனம் பற்றற்றதோ அவன் இந்த உலக உயிர்கள் அனைத்தையும் கொன்றாலும் கொன்றவன் ஆகமாட்டான். அந்த செயலால் வரும் பந்தமும் அவனுக்கு இல்லை.
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா த்ரிவிதா கர்மசோதநா। கரணம் கர்ம கர்தேதி த்ரிவித: கர்மஸம்க்ரஹ:॥ 18.18 ॥ |
அறிவு, அறியப்படும் பொருள், அறிபவன் என்று கர்ம தூண்டுதல் மூன்று விதம். கருவி, செயல், செய்பவன் என்று செயலின் ஆதாரம் மூன்று விதம்.
ஜ்ஞாநம் கர்ம ச கர்தாச த்ரிதைவ குணபேதத:। ப்ரோச்யதே குணஸங்க்யாநே யதாவச்ச்ருணு தாந்யபி॥ 18.19 ॥ |
அறிவும் செயலும் செய்பவனும் குண வேறுப்பாட்டால் மூவகை என்று குணங்களை பற்றி கூறுவதான சாங்கிய சாஸ்திரத்தில் சொல்லபட்டுருக்கிறது. அவற்றையும் உள்ளபடி கேள்.
ஸர்வபூதேஷு யேநைகம் பாவமவ்யயமீக்ஷதே। அவிபக்தம் விபக்தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி ஸாத்த்விகம்॥ 18.20 ॥ |
வெவேறான உயிரினங்களில் வேறுபாடற்ற அழியாத ஒரே உணர்வை காண்கின்ற அறிவு சாத்வீக அறிவு.