ஆபூர்யமாணமசலப்ரதிஷ்டம் ஸமுத்ரமாப: ப்ரவிஷந்தி யத்வத்। தத்வத்காமா யம் ப்ரவிஷந்தி ஸர்வே ஸ ஷாந்திமாப்நோதி ந காமகாமீ॥ 2.70 ॥ |
முற்றிலும் நிறைந்தது, அமைதியாக இருக்கின்ற கடலை நதிநீர் எப்படி அடைகிறதோ, அப்படியே யாரை எல்லா ஆசைகளும் அடைகின்றனவோ அவன் மன அமைதி பெறுகின்றான். ஆசைவசப்பட்டவன் அமைதி அடைவதில்லை.
விஹாய காமாந்ய: ஸர்வாந்புமாம்ஷ்சரதி நி:ஸ்ப்ருஹ:। நிர்மமோ நிரஹங்கார: ஸ ஷாந்திமதிகச்சதி॥ 2.71 ॥ |
யார் எல்லா ஆசைகளையும் விட்டு, பற்றின்றி, நான் எனது என்ற எண்ணங்கள் இன்றி வாழ்கிறானோ அவன் அமைதியை அடைகிறான்.
ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி। ஸ்தித்வாஸ்யாமந்தகாலே அபி ப்ரஹ்மநிர்வாணம்ருச்சதி॥ 2.72 ॥ |
அர்ஜுனா ! இது தான் இறைநிலை, இதனை அடைந்தவன் மனமயக்கதில் ஆழ்வதில்லை. அவன் இந்த நிலையில் நிலைத்து இருந்து மரணகாலத்திலாவது ஆனந்தமயமான இறைவனை அடைகிறான்.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே ஸாங்க்யயோகோ நாம த்விதீயோ அத்யாய:॥ 2 ॥ |
ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'ஸாங்க்யயோகம்' எனப் பெயர் படைத்த இரண்டாவது அத்தியாயம் நிறைவுற்றது.