அதிகாரம் 13
2 அதற்கு மாறாக, தீயோ காற்றோ சூறாவளியோ, விண்மீன் கூட்டமோ, அலைமோதும் வெள்ளமோ, வானத்தின் சுடர்களோ தான் உலகத்தை ஆளுகின்ற தெய்வங்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
3 இந்தப் பொருட்களின் அழகில் மயங்கி இவற்றைத் தெய்வங்கள் என எண்ணினார்களாயின், இவற்றையெல்லாம் ஆளுகிறவர் இவற்றினும் எவ்வளவோ மேலானவர் என்பதை அறிந்து கொள்ளட்டும்@ ஏனெனில் அழகின் ஊற்றே அவற்றை உண்டாக்கினார்.
4 அவற்றின் வல்லமையையும் ஆற்றலையும் கண்டு மனிதர் வியப்பில் ஆழ்கிறார்கள் எனில், அவற்றையெல்லாம் ஆக்கியவர் அவற்றினும் எவ்வளவோ வல்லமையுள்ளவர் என்பதை அவற்றால் அறியட்டும்.
5 ஏனெனில் படைப்புகளின் பெருமையையும் அழகையும் கண்டு அவற்றைப் படைத்தவரைக் கண்டறியலாம்.
6 ஆயினும் அந்த மனிதர்கள் மேல் அவ்வளவு குற்றம் இல்லையெனலாம்@ ஏனெனில் கடவுளைத் தேடிக் கண்டுபிடிக்க முயலும் போது ஒருவேளை அவர்கள் தவறியிருக்கலாம்.
7 அவருடைய படைப்புகளின் நடுவில் வாழும் போது அவரைத் தேடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்@ ஆனால் அவர்களுக்குப் புலனாவதையே நம்பிவிடுகிறார்கள்@ கண்ணுக்குப் புலனாகிறவை அவ்வளவு அழகாயிருக்கின்றன.
8 இருப்பினும் இவர்களும் சாக்குப் போக்குச் சொல்ல இடமில்லை.
9 ஏனெனில், உலகத்தைப் பற்றி ஆராய்ந்தறியும் அளவுக்கு அவர்களுக்கு அறிவாற்றல் இருக்கும் போது, இவற்றுக்கொல்லாம் ஆண்டவரை எளிதில் கண்டறிய அவர்கள் தவறிவிட்டதெப்படி?
10 ஆனால், பொன் வெள்ளியால் திறமையாய் உருவாக்கப்பட்டு மனிதரின் கைகளால் செய்யப்பட்ட வேலைப்பாடுகளுக்கும், மிருகங்களின் சாயலான உருவங்களுக்கும், அல்லது பண்டை நாளில் கையால் செதுக்கப்பட்ட பயனற்றதொரு கல்லுக்கும் "தெய்வங்கள்" எனப் பெயரிட்டு உயிரற்ற பொருட்கள்மீது தங்கள் நம்பிக்கையை வைக்கிற மனிதர்கள் மிகவும் இரங்கத்தக்கவர்கள்!
11 திறமைவாய்ந்த வேலைக்காரன் ஒருவன் பொருத்தமான மரமொன்றை வெட்டுகிறான்@ அதன் மேற்பட்டைகளையெல்லாம் திறமையாய் உரிக்கிறான்@ பிறகு மிகுந்த கைத்திறமையோடு அதைக் கொண்டு வாழ்க்கையில் தனக்குப் பயன்படும் ஒரு பொருளைச் செய்கிறான்@
12 வேலை செய்து மீதியான மரத்தை அடுப்பெரிக்கவும் சமையல் செய்யவும் பயன்படுத்துகிறான்.
13 ஆயினும் அவற்றுள் ஒன்றுக்கும் உதவாததும் கோணலும் முட்டு முடிச்சுகளும் நிறைந்த மரத்துண்டையெடுத்து, ஓய்வுநேரத்தில் அதைக் கவனமாய்ச் செதுக்கிக் கலைத்திறனோடு அதை இழைத்து அதிலிருந்து மனிதனின் சாயல் ஒன்றை உருவாக்குகிறான்@
14 அல்லது, தாழ்ந்த ஒரு மிருகத்தைப் போலச் செய்து அதற்குச் சிவப்பு வண்ணம் அடித்து மேற்பரப்பைச் சிவப்பாக்கி, அதன் மேலுள்ள கறைகளையெல்லாம் வண்ணத்தால் மறைக்கிறான்@
15 பிறகு, அதற்குப் பொருத்தமான ஒரு மாடம் செய்து, அதில் அந்தச் சிலையை வைத்து ஆணியால் பொருத்துகிறான்.
16 இவ்வாறு, அது விழுந்துவிடாதபடி அக்கறையெடுத்துக்கொள்கிறான்@ ஏனெனில் தனக்குத்தானே உதவி செய்து கொள்ள அந்தச் சிலையால் இயலாது என்பது அவனுக்குத் தெரியும்@ அது வெறும் சிலைதான்@ ஆகவே அதற்கு உதவி தேவை.
17 தன் உடைமைகளுக்காகவும் திருமணத்திற்காகவும், தன் குழந்தைகளுக்காகவும் வேண்டிக் கொள்ளும் போது, உயிரற்ற ஒரு பொருளைப் பார்த்துப் பேச அவனுக்கு வெட்கமாய் இருப்பதே இல்லை.
18 வலிமையற்ற பொருளிடம் உடல்நலம் வேண்டுகிறான்@ செத்துப்போன ஒன்றை வாழ்வு தரும்படி மன்றாடுகிறான்@ ஒன்றுக்கும் உதவாத ஒன்றினிடம் உதவி கோருகிறான்@
19 காலெடுத்து வைக்க முடியாத ஒன்றைப் பார்த்து வழிப்பயணத்தில் துணை நிற்கக் கேட்கிறான். கைகளில் வலுவில்லாத ஒரு பொருளிடம், செல்வம் திரட்டுவதிலும் வேலையிலும் செயல்களிலும் வெற்றியும் ஆற்றலும் தரும்படி கேட்கிறான்.