அதிகாரம் 15
2 நாங்கள் பாவம் கட்டிக் கொண்டாலும், நாங்கள் உமக்குத்தான் சொந்தம்@ எனெனில் உமது வல்லமையை அறிவோம். ஆனால் நாங்கள் பாவம் கட்டிக்கொள்ள மாட்டோம்@ ஏனெனில் உம்மவர்களாகவே நாங்கள் எண்ணப்படுகிறோம் என்பதை அறிவோம்.
3 உம்மை அறிதலே நிறைவான நீதி@ உம் வல்லமையை அறிதலோ சாகாமைக்கு ஆணிவேர்.
4 மனிதர்களுடைய திறமையின் தீய நோக்கத்தாலும் எங்களைத் தவறான நெறியில் இழுத்துப் போக முடியவில்லை@ வண்ண ஓவியர்களின் பயனற்ற உழைப்போ, பல நிறங்கள் தீட்டிய உருவமோ எங்களைக் கெடுக்கவில்லை.
5 அவற்றின் தோற்றம் அறிவிலிகளுக்குத் தான் ஏக்க மூட்டினது@ அவர்கள் தான் செத்துப்போன உருவமொன்றின் உயிரற்ற சாயலை விரும்புகிறார்கள்.
6 அவற்றைச் செய்கிறவர்களும் வணங்குகிறவர்களும், அவற்றுக்கு வழிபாடு செலுத்துகிறவர்களும், தீமையை விரும்புகிறவர்களே@ அத்தகைய நம்பிக்கைக்கும் அவர்களுக்கும் பொருத்தமே.
7 குயவன் இளகிய மண்ணைக் பிசைந்து, நமக்குப் பயன்படும் மட்கலங்களை அக்கறையோடு செய்கிறான்@ ஒரே மண்ணைக் கொண்டு தான் நல்ல வகையிலும் மாறான வகையிலும் பயன்படுகிற பாண்டங்களைச் செய்கிறான். இவற்றுள் ஒவ்வொன்றும் எவ்வகையில் பயன்பட வேண்டுமென மண்ணால் வனையும் குயவனே தீர்மானிக்கிறான்.
8 சிறிது காலத்திற்கு முன்பு மண்ணால் உண்டாக்கப்பட்டுத் தனக்குக் கடனாகத் தரப்பட்ட ஆன்மாவை இன்னும் சிறிது காலத்திற்குள் திருப்பிக் கையளிக்கும்போது, தான் எடுக்கப்பட்ட மண்ணுக்கே திரும்பிப்போகப் போகிற இந்தக் குயவன் வீணாய் உழைத்து அதே மண்ணிலிருந்து ஓர் அற்ப தெய்வத்தை உருவாக்குகிறான்.
9 இவ்வாறிருந்தும், அவன் தான் சாகவேண்டியவனே என்பதையும், தன் வாழ்க்கை மிகக் குறுகியது என்பதையும் எண்ணிப் பார்க்கிறதில்லை@ ஆனால், பொன், வெள்ளியால் வேலை செய்பவர்களோடு போட்டியிடுகிறான்@ பித்தளையில் வேலை செய்கிறவர்களைப் போல் செய்ய முயல்கிறான்@ போலி உருவங்களைச் செய்வது தனக்கு மகிமையென நினைக்கிறான்.
10 அவன் உள்ளமோ வெறும் சாம்பல்தான்@ அவனது நம்பிக்கை புழுதியிலும் தாழ்வானது@ அவன் வாழ்வு களிமண்ணிலும் ஈனமானது.
11 ஏனெனில் தன்னை உருவாக்கியவரும், தனக்கோர் ஆற்றல்மிக்க ஆன்மாவை அளித்து தனக்குள் உயிருள்ள ஆவியை விட்டவரும் யாரென்பதை அவன் அறிந்து கொள்ளவில்லை.
12 அவனோ நம் வாழ்வை ஒரு விளையாட்டென்றும், பணம் சேர்க்கக்கூடிய ஒரு திருவிழாச் சந்தையென்றும் நினைக்கிறான், ஒருவன் எவ்வகையிலும்- இழிவான வழியிலுங் கூட பணம் சேர்க்கலாம் என்பது அவனது கருத்து.
13 உடையக் கூடிய பாண்டங்களையும் சிலைகளையும் நிலத்தின் மண்ணால் தான் செய்யும் போது, தான் பாவங் கட்டிக்கொள்கிறதை இந்தமனிதன் மற்றெல்லாரையும் விட மிக நன்றாக அறிந்திருக்கிறான்.
14 உம் மக்களை ஒடுக்கிய பகைவர்கள் அனைவரும், அறியாக் குழந்தையை விட அறிவீனராயும், இரங்கத் தக்கவர்களாயும் இருக்கின்றனர்.
15 ஏனெனில் கண்களால் பார்க்கவோ மூக்கினால் மூச்சு விடவோ காதுகளால் கேட்கவோ விரல்களால் தொட்டுணரவோ கால்களால் நடக்கவோ இயலாத புறவினத்தாரின் சிலைகளையெல்லாம் தெய்வங்கள் என இவர்கள் எண்ணிவந்தனர்@
16 அவற்றைச் செய்தவன் வெறும் மனிதனே@ அவற்றை உருவாக்கியவன் உயிரைக் கடனாகப் பெற்றவன்@ ஆனால் தன்னையொத்த ஒரு தெய்வத்தை எந்த மனிதனாலும் செய்ய இயலாது.
17 அவனோ சாகக்கூடிய மனிதன்@ அக்கிரமம் நிறைந்த தன் கைகளால் அவன் செய்வதோ ஓர் உயிரற்ற உருவம்@ தான் வணங்குகிற சிலைகளை விட அவன் எவ்வளவோ மேலானவன்@ ஏனெனில் அவனுக்கு உயிருண்டு அவற்றுக்கோ ஒருபோதும் உயிரில்லை.
18 மிகுந்த வெறுப்புக்குரிய விலங்குகளைக் கூட வணங்குகிறார்கள்@ அறிவில்லாத மிருகங்களினும் அவை தாழ்ந்தவை.
19 மிருகங்கள் என்ற அளவிலும் விரும்பிப் பார்க்கக்கூடிய அழகு கூட அவற்றின் தோற்றத்தில் இல்லை@ அவற்றைக் கடவுள் மதிக்கவுமில்லை, ஆசீர்வதிக்கவுமில்லை.