த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாஷநமாத்மந:। காம: க்ரோதஸ்ததா லோபஸ்தஸ்மாதேதத்த்ரயம் த்யஜேத்॥ 16.21 ॥ |
காமம், கோபம், பேராசை என்ற மூன்றும் நரகத்தின் வாசல்கள். இவை மனிதனை அழிக்கின்றன. ஆதலால் இந்த மூன்றையும் விட்டுவிட வேண்டும்.
ஏதைர்விமுக்த: கௌந்தேய தமோத்வாரைஸ்த்ரிபிர்நர:। ஆசரத்யாத்மந: ஷ்ரேயஸ்ததோ யாதி பராம் கதிம்॥ 16.22 ॥ |
அர்ஜுனா ! இந்த மூன்று நரக வாசல்களிலிருந்தும் விடுபட்ட மனிதன் தனக்கு நன்மை செய்கிறான். மேலான நிலையை அடைகிறான்.
ய: ஷாஸ்த்ரவிதிமுத்ஸ்ருஜ்ய வர்ததே காமகாரத:। ந ஸ ஸித்திமவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம்॥ 16.23 ॥ |
யார் சாஸ்திர விதியை புறக்கணித்து, காமத்தால் தூண்டபெற்று செயல்படுகிறானோ அவன் இறை நிலையையோ மோட்சத்தையோ அடைவதில்லை.