சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகஷ:। தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம்॥ 4.13 ॥ |
மனிதர்கள் குணம் மற்றும் செயல்களின் வேறுபாட்டிற்கு ஏற்ப அவர்களை நான்கு பிரிவாக நான் வகுத்தேன். இவ்வாறு செய்தவன் நான் எனினும், என்னை அப்படி செய்யதவனாகவும் மாற்றங்கள் இல்லாதவனாகவும் அறிந்துகொள்.
ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மபலே ஸ்ப்ருஹா। இதி மாம் யோ அபிஜாநாதி கர்மபிர்ந ஸ பத்யதே॥ 4.14 ॥ |
செயல்கள் என் மீது ஆதிக்கம் செலுத்துவதில்லை. வினைபயனிலும் எனக்கு ஆசையில்லை. இப்படி என்னை யார் அறிகிறானோ அவன் செயல்களினால் கட்டபடுவதில்லை.
ஏவம் ஜ்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷுபி:। குரு கர்மைவ தஸ்மாத்த்வம் பூர்வை: பூர்வதரம் க்ருதம்॥ 4.15 ॥ |
இவ்வாறு அறிந்து தான் முன்னைய முமூட்ச்சுகளும் செயல் புரிந்தனர். முன்னோர்கள் முன்னாளில் செய்தது போலவே நீயும் செய்.
கிம் கர்ம கிமகர்மேதி கவயோ அப்யத்ர மோஹிதா:। தத்தே கர்ம ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே அஷுபாத்॥ 4.16 ॥ |
செய்ய வேண்டியது எது, செய்ய கூடாதது எது என்ற விஷயத்தில் அறிவாளிகள் கூட குழம்பிவிடுகிறார்கள். எதை அறிந்தால் தீமையிலிருந்து விடுபடுவாயோ அந்த செயலை உனக்கு சொல்கிறேன் .
கர்மணோ ஹ்யபி போத்தவ்யம் போத்தவ்யம் ச விகர்மண:। அகர்மணஷ்ச போத்தவ்யம் கஹநா கர்மணோ கதி:॥ 4.17 ॥ |
செய்ய வேண்டியதையும் தெரிந்துகொள்ள வேண்டும், செய்ய கூடாததையும் தெரிந்துகொள்ள வேண்டும். செயல் புரியாமல் இருப்பது பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். செயல்களின் போக்கு ஆழமானது.
கர்மண்யகர்ம ய: பஷ்யேதகர்மணி ச கர்ம ய:। ஸ புத்திமாந்மநுஷ்யேஷு ஸ யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத்॥ 4.18 ॥ |
செயலில் செயலின்மையையும் , செயலின்மையில் செயலையும் யார் காண்கிறானோ அவன் மனிதர்களுள் அறிவாளி, யோகி எல்லா செயல்களையும் செய்தவன்.