ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'ஞான கர்ம சன்யாச யோகம்' எனப் பெயர் படைத்த நான்காவது அத்தியாயம் நிறைவுற்றது.
விளக்கம்:
கீதையின் உண்மை என்ன உயிரினங்கள் மறுபிறவி உடையவை. இறைவனை அடையும் வரை மறுபிறவி நீடிக்கும். பிறவி இருந்தால் இறப்பு நிச்சயம். இறைவனை எப்போது அடைவோம் உண்மையை நன்றாக புரிந்துகொண்டு உலக நலனுக்காக தனக்கு கொடுக்கப்பட்ட கடமையை செய்து கொண்டு ஆனால் செயலின் விளைவின் மீது ஆசை பற்று வைக்காமல் இருப்பவன் இறைநிலைக்கு தகுதியானவன். அனைத்து கடமைகளையும் செய்து கொண்டு அதன் பலனை முற்றிலும் இறைவனுக்கே அர்பணித்து விட்டு இருக்கவேண்டும். இவ்வாறு இருப்பவன் இந்த உலகத்தின் எந்த பாவத்தையும் அடைய மாட்டான்.
இந்து மதம் என்றால் தவம் செய்ய வேண்டும் தியானம் செய்ய வேண்டும் இது தான் இந்து மதம் என்று பலரும் நினைக்கிறார்கள். இது உண்மை இல்லை. உண்மை என்னவென்றால் தவம் தியானம் சிறந்தது தான் ஆனால் தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை திறம்பட செய்து முடித்த ஒருவனுக்கு, வேலைகள் இனி இல்லை என்ற நிலையில் இருக்கின்ற ஒருவனுக்கு, தவமும் தியானமும் இறைவனை அடைவதற்கு வழியாக அமைகிறது.
நிர்ணயிக்கப்பட்ட கடமைகள் இருக்கும் பட்சத்தில் அந்த கடமைகளை விருப்பு வெறுப்பு இல்லாமல் கடமையாக நினைத்து திறம்பட செய்ய வேண்டும். கடமைகளை திறம்பட செய்வதன் மூலமே கர்மயோகி இறைவனை அடைய முடியும்.
கடமைகளை விட்டுவிட்டு தியானம் செய்தால் அது மூடனின் செயல். அது ஒருவனை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லாது.
தியானம் மூலம் அதாவது ஞான மார்க்கத்தின் மூலம் இறைவனை அடைபவன் அடையும் நிலையை வேலைகளை செய்பவனும் அடையலாம். ஆனால் கடமைகளை வேலைகளை செய்யும் போது அதனால் விளையும் பலனில் பற்று வைக்காமல் செய்தால் அவனும் ஞான யோகி போலவே கருதபடுவான். ஏனெனில் இவனுக்கு எந்த வித ஆசையோ, வெறுப்போ, விருப்போ, இல்லை. அனைத்தையும் சமமாக கருதுகிறான்.