யஜ்ஞஷிஷ்டாம்ருதபுஜோ யாந்தி ப்ரஹ்ம ஸநாதநம்। நாயம் லோகோ அஸ்த்யயஜ்ஞஸ்ய குதோ அந்ய: குருஸத்தம॥ 4.31 ॥ |
குரு வம்சத்தில் சிறந்தவனே ! வேள்வியின் வாயிலாக கிடைக்கின்ற அமுதத்தை உண்பவர்கள் நித்திய பொருளான இறைவனை அடைகிறார்கள். வேள்வியில் ஈடுபடாதவனுக்கு இந்த உலகமே கிடையாது.மற்ற உலகம் எங்கே
ஏவம் பஹுவிதா யஜ்ஞா விததா ப்ரஹ்மணோ முகே। கர்மஜாந்வித்தி தாந்ஸர்வாநேவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே॥ 4.32 ॥ |
இவ்வாறு பலவிதமான வேள்விகள் வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் செயல்களை ஆதாரமாகக்கொண்டவை என்று அறிந்துகொள். இவ்வாறு அறிந்து கர்மதளையிலிருந்து விடுபடுவாய்.
ஷ்ரேயாந்த்ரவ்யமயாத்யஜ்ஞாஜ்ஜ்ஞாநயஜ்ஞ: பரம்தப। ஸர்வம் கர்மாகிலம் பார்த ஜ்ஞாநே பரிஸமாப்யதே॥ 4.33 ॥ |
எதிரிகளை வாட்டுபவனே புறப்பொருட்களால் செய்யபடுகின்ற யாகத்தைவிட ஞான வேள்வி சிறப்பானது. அர்ஜுனா எல்லா செயல்களும் ஞானத்தில் நிறைவடைகிறது.
தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஷ்நேந ஸேவயா। உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வதர்ஷிந:॥ 4.34 ॥ |
வணங்கியும் கேள்விகள் கேட்டும், பணிவிடை செய்தும் அந்த ஞானத்தை பெறவேண்டும். உண்மையை அறிந்த மகான்கள் உனக்கு அந்த ஞானத்தை தருவார்கள்.
யஜ்ஜ்ஞாத்வா ந புநர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்டவ। யேந பூதாந்யஷேஷாணி த்ரக்ஷ்யஸ்யாத்மந்யதோ மயி॥ 4.35 ॥ |
அர்ஜுனா ! அந்த ஞானத்தை பெற்றால் மீண்டும் இப்படி குழப்பம் அடைய மாட்டாய். அந்த ஞானத்தின் பயனால் எல்லா உயிர்களை உன்னிலும் அப்படியே என்னிலும் காண்பாய்.
அபி சேதஸி பாபேப்ய: ஸர்வேப்ய: பாபக்ருத்தம:। ஸர்வம் ஜ்ஞாநப்லவேநைவ வ்ருஜிநம் ஸம்தரிஷ்யஸி॥ 4.36 ॥ |
பெரிய பாவம் செய்தவனாக இருந்தாலும், எல்லா பாவங்களையும் ஞானமாகிய தெப்பத்தால் கடப்பாய்.