பஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்யதே। வாஸுதேவ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப:॥ 7.19 ॥ |
பல பிறவிகளின் முடிவில் ஞானி, எல்லாம் இறை வடிவமே என்று கண்டு என்னை வந்தடைகிறான். அத்தகைய மகானை காண்பது மிகவும் அரிது.
காமைஸ்தைஸ்தைர்ஹ்ருதஜ்ஞாநா: ப்ரபத்யந்தே அந்யதேவதா:। தம் தம் நியமமாஸ்தாய ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா॥ 7.20 ॥ |
இயற்கையான மனபோக்கினால் தூண்டப்பட்டு, வெவ்வேறு ஆசைகளால் மதிமயங்கியவர்கள் அந்தந்த ஆசைகளுக்கு ஏற்ப பல தேவதைகளை வழிபடுகின்றனர்.
யோ யோ யாம் யாம் தநும் பக்த: ஷ்ரத்தயார்சிதுமிச்சதி। தஸ்ய தஸ்யாசலாம் ஷ்ரத்தாம் தாமேவ விததாம்யஹம்॥ 7.21 ॥ |
எந்தெந்த பக்தன் எந்தெந்த தேவதையை நம்பிக்கையுடன் வழிபட விரும்புகிறானோ, அவர்களின் அந்த நம்பிக்கையை நான் உறுதி உடையதாக செய்கிறேன்.
ஸ தயா ஷ்ரத்தயா யுக்தஸ்தஸ்யாராதநமீஹதே। லபதே ச தத: காமாந்மயைவ: விஹிதாந்ஹிதாந்॥ 7.22 ॥ |
அந்த பக்தன் நம்பிக்கையுடன் அந்த தேவதையை வழிபடுகிறேன். அந்த தேவதையின் மூலம் தன் ஆசைகள் நிறைவேற பெறுகிறான். எனினும் அந்த ஆசைகளை நிறைவேற்றுபவன் நானே.
அந்தவத்து பலம் தேஷாம் தத்பவத்யல்பமேதஸாம்। தேவாந்தேவயஜோ யாந்தி மத்பக்தா யாந்தி மாமபி॥ 7.23 ॥ |
அறிவு குறைந்தவர்களாகிய அவர்கள் பெறுகின்ற பலன் எல்லைக்கு உட்பட்டது. தேவதைகளை வழிபடுபவர்கள் தேவதையை அடைகிறார்கள். என் பக்தர்கள் என்னையே அடைகிறார்கள்.
அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபுத்தய:। பரம் பாவமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம்॥ 7.24 ॥ |
அழிவற்றதும், இணையற்றதுமான எனது மேலான நிலையை அறியாத மூடர்கள் வெளிப்பட்டு தோன்றாத என்னை புலன்களுக்கு தென்படும் இயல்பை அடைந்ததாக நினைக்கின்றனர்.