நாஹம் ப்ரகாஷ: ஸர்வஸ்ய யோகமாயாஸமாவ்ருத:। மூடோ அயம் நாபிஜாநாதி லோகோ மாமஜமவ்யயம்॥ 7.25 ॥ |
யோக மாயையால் நன்றாக மறைக்கப்பட்டுள்ள நான் எல்லோருக்கும் தெரிவதில்லை. நான் பிறப்பற்றவன், நான் அழிவற்றவன் என்பதை அறிவற்ற இந்த உலகம் தெரிந்துகொல்வதில்லை.
வேதாஹம் ஸமதீதாநி வர்தமாநாநி சார்ஜுந। பவிஷ்யாணி ச பூதாநி மாம் து வேத ந கஷ்சந॥ 7.26 ॥ |
அர்ஜுனா ! சென்றவை, இருப்பவை, வருபவை ஆகிய உயிர்கள் அனைத்தையும் நான் அறிவேன், ஆனால் என்னை யாரும் அறிவதில்லை.
இச்சாத்வேஷஸமுத்தேந த்வந்த்வமோஹேந பாரத। ஸர்வபூதாநி ஸம்மோஹம் ஸர்கே யாந்தி பரம்தப॥ 7.27 ॥ |
எதிரிகளை வாட்டுகின்ற அர்ஜுனா ! விருப்பு வெறுப்பினால் தோன்றுகின்ற இருமை மயக்கத்தால் எல்லா உயிர்களும் பிறக்கும் போதே பெரும் மயக்கத்தில் ஆழ்ந்துள்ளன.
யேஷாம் த்வந்தகதம் பாபம் ஜநாநாம் புண்யகர்மணாம்। தே த்வந்த்வமோஹநிர்முக்தா பஜந்தே மாம் த்ருடவ்ரதா:॥ 7.28 ॥ |
எந்த புண்ணியசாலிகளுக்கு பாவம் தீர்ந்துவிட்டதோ, அவர்கள் இருமை மயக்கத்திலிருந்து விடுபட்டு, மன உறுதியுடன் என்னை வழிபடுகின்றனர்.
ஜராமரணமோக்ஷாய மாமாஷ்ரித்ய யதந்தி யே। தே ப்ரஹ்ம தத்விது: க்ருத்ஸ்நமத்யாத்மம் கர்ம சாகிலம்॥ 7.29 ॥ |
மூப்பு மற்றும் மரணத்திலிருந்து விடுபடுவதற்காக என்னை சரணடைந்து யார் முயற்சி செய்கிறார்களோ அவர்கள் இறைவனையும் ஆன்மா மற்றும் கர்மம் பற்றிய அனைத்தையும் அறிகிறார்கள்.
ஸாதிபூதாதிதைவம் மாம் ஸாதியஜ்ஞம் ச யே விது:। ப்ரயாணகாலே அபி ச மாம் தே விதுர்யுக்தசேதஸ:॥ 7.30 ॥ |
யார் என்னை அதிபூதம், அதிதெய்வம், அதியஜ்ஞம் இவற்றுடன் சேர்ந்தவனாக அறிகிறார்களோ, நிலைபெற்ற மனத்தை உடைய அவர்கள், மரண வேளையிலும் என்னை அடைகிறார்கள்.