யஜ்ஞஷிஷ்டாஷிந: ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பிஷை:। புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத்॥ 3.13 |
வேள்வியில் எஞ்சியதை உண்பவர்கலான மேலோர் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். ஆனால் தங்களுக்காகவே சமைக்கிறார்களோ அந்த பாவிகள் பாவத்தையே அனுபவிக்கிறார்கள்.
அந்நாத்பவந்தி பூதாநி பர்ஜந்யாதந்நஸம்பவ:। யஜ்ஞாத்பவதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்மஸமுத்பவ:॥ 3.14 |
உணவிலிருந்து உயிர்கள் உண்டாகின்றன. உணவு மழையிலிருந்து உண்டாகிறது. மழை வேல்வியிளிருந்து உண்டாகிறது. வேள்வி செயல்களிலிருந்து உண்டாகிறது.
கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம்। தஸ்மாத்ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்॥ 3.15 |
செயல் உடம்பிலிருந்து உண்டாகிறது. உடம்பு உயிரிலிருந்து தோன்றுகிறது. எனவே எல்லோரும் வேல்வியிலேயே நிலை பெற்றுள்ளனர்.
ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ ய:। அகாயுரிந்த்ரியாராமோ மோகம் பார்த ஸ ஜீவதி॥ 3.16 |
அர்ஜுனா ! இவ்வாறு இயங்குகின்ற சக்கரத்தை யார் பின்பற்றவில்லையோ அவன் பாவி, புலன் வாழ்க்கை வாழ்பவன், அவனது வாழ்க்கை வீணே.
யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதாத்மத்ருப்தஷ்ச மாநவ:। ஆத்மந்யேவ ச ஸம்துஷ்டஸ்தஸ்ய கார்யம் ந வித்யதே॥ 3.17 |
யார் ஆன்மாவில் இன்பம் காண்கிறானோ , ஆன்மாவில் மட்டும் திருப்தி உடையவனோ, ஆன்மாவில் மட்டும் மகிழ்ச்சி அடைகிறானோ அவனுக்கு எந்த கடமையும் இல்லை.
நைவ தஸ்ய க்ருதேநார்தோ நாக்ருதேநேஹ கஷ்சந। ந சாஸ்ய ஸர்வபூதேஷு கஷ்சிதர்தவ்யபாஷ்ரய:॥ 3.18 |
அவனுக்கு இந்த உலகத்தில் செயல்களால் பயன் இல்லை. எதுவும் செய்யாததால் அவனுக்கு எந்த நஷ்டமும் இல்லை, எந்த நன்மைக்காகவும் அவன் யாரையும் சார்ந்திருப்பதும் இல்லை.