ஸ்ரீபகவாநுவாச। |
காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுணஸமுத்பவ:। மஹாஷநோ மஹாபாப்மா வித்த்யேநமிஹ வைரிணம்॥ 3.37 |
ஸ்ரீ பகவான் கூறினார்: ரஜோ குணத்திலிருந்து உதிப்பதும், எல்லாவற்றையும் விழுங்குவதும், பெரும் பாவம் நிறைந்ததுமான ஆசையும் கோபமும் தான் எதிரிகள் என்று அறிந்துகொள்.
தூமேநாவ்ரியதே வஹ்நிர்யதாதர்ஷோ மலேந ச। யதோல்பேநாவ்ருதோ கர்பஸ்ததா தேநேதமாவ்ருதம்॥ 3.38 |
எப்படி நெருப்பு புகையாலும், கண்ணாடி அழுக்கினாலும், கரு கருப்பையினாலும் மூடப்பட்டு இருக்கிறதோ, அப்படியே அறிவு ஆசையில் மூடப்பட்டு இருக்கிறது.
ஆவ்ருதம் ஜ்ஞாநமேதேந ஜ்ஞாநிநோ நித்யவைரிணா। காமரூபேண கௌந்தேய துஷ்பூரேணாநலேந ச॥ 3.39 |
குந்தியின் மகனே ! அடைய முடியாதவற்றை நாடுவதும், நிறைவு செய்ய முடியாததும், அறிவாளிக்கு நிரந்தர எதிரியானதும், வேண்டிய வடிவெடுப்பதுமாகிய இந்த ஆசை அறிவை மறைக்கிறது.
இந்த்ரியாணி மநோ புத்திரஸ்யாதிஷ்டாநமுச்யதே। ஏதைர்விமோஹயத்யேஷ ஜ்ஞாநமாவ்ருத்ய தேஹிநம்॥ 3.40 |
புலன்களும் மனமும் சங்கல்பமும்( will ) ஆசையின் இருப்பிடம் என்று சொல்லபடுகிறது. ஆசை இவற்றால் உண்மையறிவை மறைத்து மனிதனை மயக்குகிறது.
தஸ்மாத்த்வமிந்த்ரியாண்யாதௌ நியம்ய பரதர்ஷப। பாப்மாநம் ப்ரஜஹி ஹ்யேநம் ஜ்ஞாநவிஜ்ஞாநநாஷநம்॥ 3.41 |
பரத வீரனே ! முதலில் புலன்களை வசபடுத்தி, அறிவையும் விவேகத்தையும் அழிப்பதும் பாவத்தின் வடிவமானதுமாகிய இந்த ஆசையை உறுதியாக வென்றுவிடு.
இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேப்ய: பரம் மந:। மநஸஸ்து பரா புத்திர்யோ புத்தே: பரதஸ்து ஸ:॥ 3.42 |
புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை என்று சொல்கிறார்கள் . ஆனால் புலன்களை விட மனம் ஆற்றல் வாய்ந்தது. மனத்தைவிட புத்தி ஆற்றல் வாய்ந்தது. புத்தியைவிட ஆற்றல் வாய்ந்தது ஆன்மா.