பஹிரந்தஷ்ச பூதாநாமசரம் சரமேவ ச। ஸூக்ஷ்மத்வாத்ததவிஜ்ஞேயம் தூரஸ்தம் சாந்திகே ச தத்॥ 13.15 ॥ |
அவர் பொருட்களுக்கு வெளியிலும் உள்ளேயும் இருக்கிறார். அசையாததும் அசைவதுமாகிய பொருட்கள் எல்லாம் அவரே, நுண்மையாக இருப்பதால் அவர் அறியபட முடியாதவர். அவர் தூரத்தில் இருக்கிறார். அருகிலும் இருக்கிறார்.
அவிபக்தம் ச பூதேஷு விபக்தமிவ ச ஸ்திதம்। பூதபர்த்ரு ச தஜ்ஜ்ஞேயம் க்ரஸிஷ்ணு ப்ரபவிஷ்ணு ச॥ 13.16 ॥ |
அறியப்பட வேண்டிய அந்த பரம்பொருள் பிரிவுபடாதவர். பொருட்களில் பிரிவுபட்டது போல் தோன்றுகிறார். பொருட்களை தோற்றுவிப்பதும், தாங்குவதும், தன்னுள்கொள்வதும் அவரே.
ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதிஸ்தமஸ: பரமுச்யதே। ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஜ்ஞாநகம்யம் ஹ்ருதி ஸர்வஸ்ய விஷ்டிதம்॥ 13.17 ॥ |
அந்த இறைவன் ஒளிகளுக்கெல்லாம் ஒளியாக இருக்கிறார். அவர் இருளுக்கு அப்பாற்பட்டவர், அவரே ஞானம், அறியபடவேண்டியவர், எல்லோருடைய இதயத்திலும் நிலைத்திருப்பவர்.
இதி க்ஷேத்ரம் ததா ஜ்ஞாநம் ஜ்ஞேயம் சோக்தம் ஸநாஸத:। மத்பக்த ஏதத்விஜ்ஞாய மத்பாவாயோபபத்யதே॥ 13.18 ॥ |
இவ்வாறு வீடும், ஞானமும், அறியபடவேண்டிய பொருளும் பற்றி சுருக்கமாக கூறப்பட்டது. என் பக்தன் இதை அறிந்து, என் நிலைக்கு தகுதி ஆகிறான்.
ப்ரக்ருதிம் புருஷம் சைவ வித்யநாதி உபாவபி। விகாராம்ஷ்ச குணாம்ஷ்சைவ வித்தி ப்ரக்ருதிஸம்பவாந்॥ 13.19 ॥ |
இயற்கை, இறைவன் இரண்டிற்கும் ஆரம்பம் கிடையாது. மாற்றங்களும் குணங்களும் இயற்கையிலிருந்து பிறந்தவை என்பதை அறிந்து கொள்.