ப்ரக்ருத்யைவ ச கர்மாணி க்ரியமாணாநி ஸர்வஷ:। ய: பஷ்யதி ததாத்மாநமகர்தாரம் ஸ பஷ்யதி॥ 13.29 ॥ |
எல்லா செயல்களும் இயற்கையினாலேயே செய்யபடுகின்றன என்றும் இறைவன் தன்முனைப்பற்றவர் என்றும் யார் காண்கிறானோ அவனே காண்கிறான்.
யதா பூதப்ருதக்பாவமேகஸ்தமநுபஷ்யதி। தத ஏவ ச விஸ்தாரம் ப்ரஹ்ம ஸம்பத்யதே ததா॥ 13.30 ॥ |
பல்வேறு உயிரினங்கள் ஒன்றில் இருப்பதையும் அந்த ஒன்றில் இருந்தே அவை அனைத்தும் விரிந்து வெளிபடுவதையும் எப்போது ஒருவன் காண்கிறானோ அப்போது அவன் இறைநிலையை அடைகிறான்.
அநாதித்வாந்நிர்குணத்வாத்பரமாத்மாயமவ்யய:। ஷரீரஸ்தோ அபி கௌந்தேய ந கரோதி ந லிப்யதே॥ 13.31 ॥ |
குந்தியின் மகனே ! ஆதி இல்லாததாலும் குணங்கள் இல்லாததாலும் அழிவற்ற இறைவன் இந்த உடம்பில் இருந்தாலும் செயல் புரிவதில்லை. பற்று கொல்வதும் இல்லை.
யதா ஸர்வகதம் ஸௌக்ஷ்ம்யாதாகாஷம் நோபலிப்யதே। ஸர்வத்ராவஸ்திதோ தேஹே ததாத்மா நோபலிப்யதே॥ 13.32 ॥ |
எங்கும் பரந்துள்ள ஆகாசம் நுண்மை காரணமாக எப்படி எதனாலும் பாதிக்கபடுவதில்லையோ அப்படியே உடம்பு முழுவதும் நிறைந்துள்ள ஆன்மாவும் பாதிக்கபடுவதில்லை.
யதா ப்ரகாஷயத்யேக: க்ருத்ஸ்நம் லோகமிமம் ரவி:। க்ஷேத்ரம் க்ஷேத்ரீ ததா க்ருத்ஸ்நம் ப்ரகாஷயதி பாரத॥ 13.33 ॥ |
அர்ஜுனா ! ஒரே சூரியன் இந்த உலகம் முழுவதையும் எப்படி ஒளிர செய்கிறானோ, அப்படியே குடியிருப்பவனாகிய இறைவன் உடம்பு, உயிர், மனம் அனைத்தையும் இயங்க செய்கிறான்.