ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி। தர்ம்யாத்தி யுத்தாச்ச்ரேயோ அந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்யதே॥ 2.31 ॥ |
சொந்த கடமையை பார்த்தாலும் உன் தயக்கம் தகாததாகவே உள்ளது. ஏனெனில் நியாயத்திற்கான போரை விட க்ஷத்திரியனுக்கு வேறு சிறப்பு ஏதும் இல்லை.
யத்ருச்சயா சோபபந்நம் ஸ்வர்கத்வாரமபாவ்ருதம்। ஸுகிந: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்தமீத்ருஷம்॥ 2.32 ॥ |
அர்ஜுனா ! தற்செயலாக நேர்ந்துள்ளதும் திறந்து இருக்கின்ற சொர்க்கவாசல் போன்றதுமான அந்த போரை புன்னியசாளிகலான க்ஷத்திரியர்கள் அடைகிறார்கள்.
அத சேத்த்வமிமம் தர்ம்யம் ஸம்க்ராமம் ந கரிஷ்யஸி। தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி॥ 2.33 ॥ |
நியாதிற்க்கான இந்த போரில் ஈடுபடாமல் போனால் நீ கடமையிலிருந்து தவரியவனாகி புகழை இழந்து பாவத்தை அடைவாய்.
அகீர்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தே அவ்யயாம்। ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாததிரிச்யதே॥ 2.34 ॥ |
மக்கள் உன்னை எப்போதும் இகழ்ந்து பேசுவார்கள்.பெருமைகுரிய ஒருவனுக்கு அவமானம் என்பது மரணத்தை விட இழிவானதாகும்.
பயாத்ரணாதுபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா:। யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்॥ 2.35 ॥ |
பயத்தினால் போரிலிருந்து நீ பின்வாங்கியதாக பெரிய வீரர்கள் நினைப்பார்கள். உன்னை புகழ்ந்த அவர்களே இகழவும் செய்வார்கள் .
அவாச்யவாதாம்ஷ்ச பஹூந்வதிஷ்யந்தி தவாஹிதா:। நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ து:கதரம் நு கிம்॥ 2.36 ॥ |
உன்னுடைய எதிரிகளும் உனது திறமையை இகழ்ந்து சொல்லத்தகாத அவதூறுகளை சொல்வார்கள் .அதைவிட பெரும் துன்பம் எது உள்ளது.