ஸ்ரீபகவாநுவாச। |
காலோ அஸ்மி லோகக்ஷயக்ருத்ப்ரவ்ருத்தோ
லோகாந்ஸமாஹர்துமிஹ ப்ரவ்ருத்த:। க்ருதே அபி த்வாம் ந பவிஷ்யந்தி ஸர்வே யே அவஸ்திதா: ப்ரத்யநீகேஷு யோதா:॥ 11.32 ॥ |
ஸ்ரீ பகவான் கூறினார்: உலகங்களை அழிக்கவல்ல காலம் நான். இங்கே உலகங்களை அழிக்க தலைபட்டிருக்கிறேன். நீ போரிட்டு கொல்லாவிட்டலும் எதிராளிகளின் படையில் யாரும் மிஞ்ச போவதில்லை.
தஸ்மாத்த்வமுத்திஷ்ட யஷோ லபஸ்வ
ஜித்வா ஷத்ரூந் புங்க்ஷ்வ ராஜ்யம் ஸம்ருத்தம்। மயைவைதே நிஹதா: பூர்வமேவ நிமித்தமாத்ரம் பவ ஸவ்யஸாசிந்॥ 11.33 ॥ |
இடது கையால் கூட அம்பு எய்பவனே ! எழுந்திரு, புகழ் பெரு, எதிரிகளை வென்று செல்வம் நிறைந்த அரசை அனுபவி. இவர்கள் முன்பே என்னால் கொல்லப்பட்டுவிட்டார்கள். நீ கருவியாக மட்டும் இரு.
த்ரோணம் ச பீஷ்மம் ச ஜயத்ரதம் ச
கர்ணம் ததாந்யாநபி யோதவீராந்। மயா ஹதாம்ஸ்த்வம் ஜஹி மாவ்யதிஷ்டா யுத்யஸ்வ ஜேதாஸி ரணே ஸபத்நாந்॥ 11.34 ॥ |
என்னால் கொல்லப்பட்டுவிட்ட துரோணர் , பீஷ்மர், ஜயத்ரதன், கர்ணன் மற்றும் பிற போர்வீரர்களையும் நீ கொல். அஞ்சி வருந்தாதே. போரில் எதிரிகளை வெல்வாய். போர் செய்.
ஸம்ஜய உவாச। |
ஏதச்ச்ருத்வா வசநம் கேஷவஸ்ய
க்ருதாஞ்ஜலிர்வேபமாந: கிரீடீ। நமஸ்க்ருத்வா பூய ஏவாஹ க்ருஷ்ணம் ஸகத்கதம் பீதபீத: ப்ரணம்ய॥ 11.35 ॥ |
சஞ்ஜயன் கூறினார்: கிருஷ்ணரின் இந்த வார்த்தைகளை கேட்டு அர்ஜுனன் நடுங்கியவனாய் கை கூப்பி, நமஸ்கரித்து, பயத்துடன் வணங்கி, வாய்குளறி அவரிடம் சொன்னேன்.
அர்ஜுன உவாச। |
ஸ்தாநே ஹ்ருஷீகேஷ தவ ப்ரகீர்த்யா
ஜகத்ப்ரஹ்ருஷ்யத்யநுரஜ்யதே ச। ரக்ஷாம்ஸி பீதாநி திஷோ த்ரவந்தி ஸர்வே நமஸ்யந்தி ச ஸித்தஸங்கா:॥ 11.36 ॥ |
கிருஷ்ணா ! உனது மகிமையால் உலகம் மகிழ்கிறது.ஆனந்தம் அடைகிறது. ராட்சஷர்கள் பயந்து திசைகள் தோறும் ஓடுகிறார்கள். சித்தர்கள் அனைவரும் வணங்குகிறார்கள். இவையெல்லாம் உனக்கு பொருத்தமானதே.