அஷாஸ்த்ரவிஹிதம் கோரம் தப்யந்தே யே தபோ ஜநா:। தம்பாஹம்காரஸம்யுக்தா: காமராகபலாந்விதா:॥ 17.5 ॥ கர்ஷயந்த: ஷரீரஸ்தம் பூதக்ராமமசேதஸ:। மாம் சைவாந்த:ஷரீரஸ்தம் தாந்வித்த்யாஸுரநிஷ்சயாந்॥ 17.6 ॥ |
கர்வமும் அகங்காரமும் காமமும் ஆசையும் தீவிரமாக செயல்படுகின்ற மூடர்கள், உடம்பில் இருக்கின்ற புலன்களையும் உடம்பில் உறைகின்ற என்னையும் துன்புறுத்தி, சாஸ்திரத்தில் விதிக்கபடாத கோரமான தவம் செய்கிறார்கள். அவர்கள் அசுர இயல்பினர் என்று அறிந்து கொள்.
ஆஹாரஸ்த்வபி ஸர்வஸ்ய த்ரிவிதோ பவதி ப்ரிய:। யஜ்ஞஸ்தபஸ்ததா தாநம் தேஷாம் பேதமிமம் ஷ்ருணு॥ 17.7 ॥ |
எல்லோருக்கும் விருப்பமான உணவும் மூன்று வகைபடுகிறது. அவ்வாறே வழிபாடும் தவமும் தானமும் அவற்றின் வேற்றுமைகளை கேள்.
ஆயு:ஸத்த்வபலாரோக்யஸுகப்ரீதிவிவர்தநா:। ரஸ்யா: ஸ்நிக்தா: ஸ்திரா ஹ்ருத்யா ஆஹாரா: ஸாத்த்விகப்ரியா:॥ 17.8 ॥ |
ஆயுள், அறிவு, வலிமை, ஆரோக்கியம், சுகம், சுறுசுறுப்பு ஆகியவற்றை வளர்க்கின்ற, சாறுமிக்க, மென்மையான, சத்துமிக்க, இனிய உணவு சாத்வீகர்களுக்குப் பிரியமானது.
கட்வம்லலவணாத்யுஷ்ணதீக்ஷ்ணரூக்ஷவிதாஹிந:। ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா து:கஷோகாமயப்ரதா:॥ 17.9 ॥ |
கசப்பு, புளிப்பு மற்றும் உவர்ப்பு சுவையுடையவை, சூட்டை உண்டாக்குபவை, காரமானவை, எரிச்சல் ஊட்டுபவை, தாகத்தை ஏற்படுத்துபவை, துக்கம், கவலை மற்றும் நோயை உண்டாக்குபவை – இத்தகைய உணவு ரஜோ குணத்தினருக்கு பிரியமானவை.