தேவத்விஜகுருப்ராஜ்ஞபூஜநம் ஷௌசமார்ஜவம்। ப்ரஹ்மசர்யமஹிம்ஸா ச ஷாரீரம் தப உச்யதே॥ 17.14 ॥ |
தேவர், சான்றோர், குருமார், அறிஞர் போன்றோரை கௌரவிப்பது, சுத்தம், நேர்மை, பிரம்மசரியம், அஹிம்சை இவை உடலால் செய்யபடுகின்ற தவம்.
அநுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத்। ஸ்வாத்யாயாப்யஸநம் சைவ வாங்மயம் தப உச்யதே॥ 17.15 ॥ |
பிறர் மனத்தை நோக செய்யாத, உண்மையான, இனிமையான,இதமான வார்த்தைகளை பேசுவதும், வேதம் ஓதுவதற்கு பயிற்சி செய்வதும் வாக்கினால் செய்யபடுகின்ற தவம்.
மந: ப்ரஸாத: ஸௌம்யத்வம் மௌநமாத்மவிநிக்ரஹ:। பாவஸம்ஷுத்திரித்யேதத்தபோ மாநஸமுச்யதே॥ 17.16 ॥ |
மனத்தெளிவு, மென்மை, மௌனம், சுயகட்டுப்பாடு, தூயநோக்கம் இவை மன தவம் என்று சொல்லபடுகிறது.
ஷ்ரத்தயா பரயா தப்தம் தபஸ்தத்த்ரிவிதம் நரை:। அபலாகாங்க்ஷிபிர்யுக்தை: ஸாத்த்விகம் பரிசக்ஷதே॥ 17.17 ॥ |
பலனை விரும்பாத, யோகத்தில் நிலைபெற்ற மனிதர்களால் மிகுந்த சிரத்தையுடன் இந்த மூன்று விதமான தவமும் செய்யப்படும் போது அது சாத்வீகமானது.