ஏதாம் விபூதிம் யோகம் ச மம யோ வேத்தி தத்த்வத:। ஸோ அவிகம்பேந யோகேந யுஜ்யதே நாத்ர ஸம்ஷய:॥ 10.7 ॥ |
என்னுடைய இந்த மகிமையையும் யோகத்தையும் யார் உள்ளபடி அறிகிறானோ, அவன் யோகத்தில் உறுதியாக நிலைபெருகிறான். இதில் சந்தேகம் இல்லை.
அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே। இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவஸமந்விதா:॥ 10.8 ॥ |
நான் எல்லாவற்றின் பிறப்பிடம், என்னிலிருந்தே அனைத்தும் செயல்பட தொடங்குகின்றன. இவ்வாறு அறிந்து, சான்றோர்கள் பக்தியுடன் என்னை வழிபடுகிறார்கள்.
மச்சித்தா மத்கதப்ராணா போதயந்த: பரஸ்பரம்। கதயந்தஷ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச॥ 10.9 ॥ |
அவர்கள் என்னிடம் மனத்தை வைத்து, உயிரை எனக்கு உரியதாக்கி, ஒருவருக்கொருவர் என்னை பற்றி விளக்கம் தந்தும் எப்போதும் பேசியும் மன நிறைவு கொள்கிறார்கள். மகிழ்ச்சி அடைகிறார்கள்.
தேஷாம் ஸததயுக்தாநாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம்। ததாமி புத்தியோகம் தம் யேந மாமுபயாந்தி தே॥ 10.10 ॥ |
எப்போதும் யோகத்தில் இருப்பவர்களும், அன்புடன் என்னை வழிபடுபவர்களும் ஆகிய அவர்களுக்கு நான் புத்தி யோகத்தை வழங்குகிறேன். அதன் மூலம் அவர்கள் என்னை வந்தடைகிறார்கள்.
தேஷாமேவாநுகம்பார்தமஹமஜ்ஞாநஜம் தம:। நாஷயாம்யாத்மபாவஸ்தோ ஜ்ஞாநதீபேந பாஸ்வதா॥ 10.11 ॥ |
அவர்களிடம் கொண்ட கருணையால் நான் அவர்களின் உள்ளத்தில் வீற்றிருந்து, அறியாமை காரணமாக தோன்றிய இருளை பிரகாசிக்கின்ற ஞான தீபத்தினால் அகற்றுகிறேன்.