புரோதஸாம் ச முக்யம் மாம் வித்தி பார்த ப்ருஹஸ்பதிம்। ஸேநாநீநாமஹம் ஸ்கந்த: ஸரஸாமஸ்மி ஸாகர:॥ 10.24 ॥ |
அர்ஜுனா ! புரோகிதர்களில் முக்கியமானவரான பிருகஸ்பதி நான். சேனாதிபதிகளில் கந்தனாகவும், நீர் நிலைகளில் கடலாகவும் நான் இருக்கிறேன்.
மஹர்ஷீணாம் ப்ருகுரஹம் கிராமஸ்ம்யேகமக்ஷரம்। யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோ அஸ்மி ஸ்தாவராணாம் ஹிமாலய:॥ 10.25 ॥ |
நான் மகரிஷிகளில் பிருகு, மந்திரங்களுள் ஓரெழுத்து மந்திரமாகிய ஓங்காரம், வேல்விகளுள் ஜப வேள்வி, அசையாதவற்றில் இமயமலை.
அஷ்வத்த: ஸர்வவ்ருக்ஷாணாம் தேவர்ஷீணாம் ச நாரத:। கந்தர்வாணாம் சித்ரரத: ஸித்தாநாம் கபிலோ முநி:॥ 10.26 ॥ |
நான் மரங்களில் அரச மரம், தேவ ரிஷிகளில் நாரதர், கந்தர்வர்களில் சித்ரரதன், சித்தர்களில் கபில முனிவன்.
உச்சை:ஷ்ரவஸமஷ்வாநாம் வித்தி மாமம்ருதோத்பவம்। ஐராவதம் கஜேந்த்ராணாம் நராணாம் ச நராதிபம்॥ 10.27 ॥ |
நான் குதிரைகளில் பாற்கடலில் இருந்து தோன்றிய உச்சைசிரவசம், யானைகளில் ஐராவதம், மனிதர்களில் அரசன்.
ஆயுதாநாமஹம் வஜ்ரம் தேநூநாமஸ்மி காமதுக்। ப்ரஜநஷ்சாஸ்மி கந்தர்ப: ஸர்பாணாமஸ்மி வாஸுகி:॥ 10.28 ॥ |
நான் ஆயுதங்களில் வஜ்ஜுராயுதம், பசுக்களில் காமதேனு, நான் உயிர்களை பிறப்பிக்கின்ற மன்மதனாக இருக்கின்றேன். சர்ப்பங்களில் வாசுகியாக இருக்கின்றேன்.