அநந்தஷ்சாஸ்மி நாகாநாம் வருணோ யாதஸாமஹம்। பித்ருணாமர்யமா சாஸ்மி யம: ஸம்யமதாமஹம்॥ 10.29 ॥ |
நாகங்களில் நான் அனந்தநாக இருக்கிறேன். ஜல தேவதைகளில் வருணன் நான். முன்னோர்களில் அறியமானாக இருக்கிறேன். ஒடுக்குபவர்களில் எமன் நான்.
ப்ரஹ்லாதஷ்சாஸ்மி தைத்யாநாம் கால: கலயதாமஹம்। ம்ருகாணாம் ச ம்ருகேந்த்ரோ அஹம் வைநதேயஷ்ச பக்ஷிணாம்॥ 10.30 ॥ |
நான் அசுரர்களில் பிரகலாதன். கணிப்பவர்களில் காலம். மிருகங்களில் சிங்கம், பறவைகளில் கருடன்.
பவந: பவதாமஸ்மி ராம: ஷஸ்த்ரப்ருதாமஹம்। ஜஷாணாம் மகரஷ்சாஸ்மி ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ॥ 10.31 ॥ |
நான் சஞ்சரிப்பவற்றுள் காற்று, ஆயுதம் தாங்கியவர்களில் நான் ராமன், மீன்களில் மகர மீன், நதிகளில் கங்கை.
ஸர்காணாமாதிரந்தஷ்ச மத்யம் சைவாஹமர்ஜுந। அத்யாத்மவித்யா வித்யாநாம் வாத: ப்ரவததாமஹம்॥ 10.32 ॥ |
அர்ஜுனா ! படைப்பிற்கு ஆரம்பமும் நடுவும் முடிவும் நானே. வித்யைகளில் ஆத்ம வித்யை நான். வாதிடுபவர்களின் வாதம் நான்.
அக்ஷராணாமகாரோ அஸ்மி த்வந்த்வ: ஸாமாஸிகஸ்ய ச। அஹமேவாக்ஷய: காலோ தாதா அஹம் விஷ்வதோமுக:॥ 10.33 ॥ |
நான் எழுத்துக்களில் அகரம், கூட்டு சொற்களில் இருசொற்கூட்டு, முடிவற்ற காலம் நானே. எங்கும் முகமுள்ளவனாக இருந்துகொண்டு நான் அனைவருடைய கர்மபலனை பகிர்ந்தளிக்கிறேன்.