ம்ருத்யு: ஸர்வஹரஷ்சாஹமுத்பவஷ்ச பவிஷ்யதாம்। கீர்தி: ஸ்ரீர்வாக்ச நாரீணாம் ஸ்ம்ருதிர்மேதா த்ருதி: க்ஷமா॥ 10.34 ॥ |
அனைத்தையும் அழிக்கின்ற மரணம் நான். செல்வந்தர்களின் செல்வம் நான். பெண்களின் சுய கௌரவம், அக அழகு, இனிய பேச்சு, துல்லிய நினைவு, கூறிய அறிவு, உறுதிப்பாடு, பொறுமை ஆகிய பண்புகளாக இருக்கிறேன்.
ப்ருஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம்। மாஸாநாம் மார்கஷீர்ஷோ அஹம்ருதூநாம் குஸுமாகர:॥ 10.35 ॥ |
நான் ஷாமங்களில் பிருஹத் ஷாமம், சந்தஷ்களில் காயத்ரி, மாதங்களில் மார்கழி, பருவங்களில் வசந்தகாலம்.
த்யுதம் சலயதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம்। ஜயோ அஸ்மி வ்யவஸாயோ அஸ்மி ஸத்த்வம் ஸத்த்வவதாமஹம்॥ 10.36 ॥ |
நான் வஞ்சகர்களின் சூதாட்டம், தேஜஷ்விகளின் தேஜஸ், வெற்றியாக முயற்சியாக இருப்பவன் நான். சாத்வீகர்களின் சத்வ குணம் நானே .
வ்ருஷ்ணீநாம் வாஸுதேவோ அஸ்மி பாண்டவாநாம் தநம்ஜய:। முநீநாமப்யஹம் வ்யாஸ: கவீநாமுஷநா கவி:॥ 10.37 ॥ |
நான் விருஷ்ணிகளில் வாசுதேவன், பாண்டவர்களில் அர்ஜுனன், முனிவர்களில் வியாசர், கவிஞர்களில் சுக்ராச்சரியார்.
தண்டோ தமயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீஷதாம்। மௌநம் சைவாஸ்மி குஹ்யாநாம் ஜ்ஞாநம் ஜ்ஞாநவதாமஹம்॥ 10.38 ॥ |
தண்டிப்பவர்களிடம் நான் தண்டனையாக இருக்கிறேன், வெற்றியை விரும்புபவர்களிடம் நீதியாக இருக்கிறேன், நான் ரகசியங்களில் மௌனம். ஞானிகளின் ஞானமாக இருப்பது நானே.